பேய்கள் என்பதெல்லாம் பொய்கள் என்றிருந்தேன்
உன்னைக் காணும்வரை….
நியுட்டனின் மூன்றாம் விதிப்படி அவை இருப்பது மெய்தான்
தேவதையாய் நீ இருக்கும் வரை….
பேய்கள் என்பதெல்லாம் பொய்கள் என்றிருந்தேன்
உன்னைக் காணும்வரை….
நியுட்டனின் மூன்றாம் விதிப்படி அவை இருப்பது மெய்தான்
தேவதையாய் நீ இருக்கும் வரை….
புத்தகத்தை பொதி சுமந்தாய்
கை வீசி சென்றேன் சூளைக்கு
கண் விழித்து களைத்தாய்
களைத்திருந்ததால் கண்ணயர்ந்தேன்
உனக்கு காதல் தந்த வலி மறக்க மது
எனக்கு வலி மரக்க….
லட்சங்களில் லட்சியம் நிறைவேறவில்லை வருந்தினாய்
இக்கூலிக்கு இனி அரிசி சோறு என்று என்னும்போதே பொங்கியது மனம்
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வெற்றியை நூலிழையில் தவறினாய்
நான் வெற்றி பெற தோல்வி இருந்தது எப்போதும்…
என்னை படைத்தவன் தானே படைத்தான் உன்னையும்
பாவம் தான் நீ
கல்லுக்கும் ஈரம் உண்டாம்
பின் எதனால் தான் ஆனதடி
உன் இதயம்